கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு

கத்தியால் தாக்கி ஒருவரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு
Published on

திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 48). இவர் சம்பவத்தன்று வரகனேரியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் அவரை கீழே தள்ளி கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com