பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயற்சி

குடும்ப பிரச்சினையில் பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயற்சி
Published on

கூடலூர் 6-வது வார்டு அருந்ததியர் ஓடை தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (28). கணவன், மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5-ந்தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த உதயகுமார், ராஜலட்சுமியை வீட்டிற்குள் இழுத்து சென்று தாக்கினார்.

மேலும் வீட்டில் இருந்து பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து வாயில் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அலறி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைக்கண்டதும் உதயகுமார் தப்பி ஓடி விட்டார். பின்னர் ராஜலட்சுமியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த உதயகுமாரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com