சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

சேத்தியாத்தோப்பு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி
Published on

கடலூர், 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரில், எனது ஊரைச் சேர்ந்த ரத்தினவேலு (வயது 30) என்பவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க ஒரத்தூர் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன் பேரில் ஒரத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரத்தினவேலு, அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றது உண்மை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, போக்சோ சட்டத்தின் கீழ் ரத்தினவேலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com