பொதுமக்கள் கவனத்திற்கு... சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்

செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்த சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு... சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்
Published on

சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் / கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையினை மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்திட ஏதுவாக அரசு விடுமுறை நாட்களிலும் வசூல் மையங்கள் செயல்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் / கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையினை மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் / பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து அரசு விடுமுறை நாட்களான சனிக்கிழமை (29.03.2025), ஞாயிற்றுக்கிழமை (30.03.2025), மற்றும் திங்கட்கிழமை (31.03.2025) அன்றும் இயங்கும்.

மேலும், நுகர்வோர்கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாக செலுத்தலாம்.

இ-சேவை மையங்கள், UPI, வசூல் மையங்களில் உள்ள QR குறியீடு மற்றும் iPoS போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் / கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

எனவே, நுகர்வோர்கள் 31.03.2025 க்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com