பயணிகளின் கவனத்திற்கு... தென் மாவட்ட ரெயில் சேவைகளில் மாற்றம்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் கவனத்திற்கு... தென் மாவட்ட ரெயில் சேவைகளில் மாற்றம்
Published on

திருச்சி,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை திருநெல்வேலி- சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.25 மணிக்கு தாம்பரம் அடைந்ததும் அங்கு நிறுத்தப்படும்.

இதே போல் ராமேசுவரம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை காலை 7.10 க்கு தாம்பரத்தில் நிறுத்தப்படும். சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 7-ந்தேதி முதல்22-ந்தேதி வரை இரவு 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 7-ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com