கடம்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

கடம்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடம்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள அதிகத்தூர் திருமலை நகரை சேர்ந்தவர் அசேன் ராவுத்தர் (வயது 49). இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு மெருகுனிஷா (44) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கை கால்கள் இயங்காமல் பக்கவாத நோயால் அவதிப்பட்டார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல் நலம் தேறவில்லை. இதனால் அடிக்கடி அவர் கை, கால் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் 27-ந் தேதியன்று மீண்டும் அவருக்கு கை, கால் வலி அதிகமானது. அவர் வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com