

நெல்லை வண்ணார்பேட்டை திருக்குறிப்புதொண்டர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி (வயது 54). ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா.