ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வேலூர் கொசப்பேட்டை புதுஅக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ரமணி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுரேஷ் அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் ரமணி வீட்டு வேலைக்கும், மகள்கள், மகன் பள்ளிக்கும் சென்றனர். வீட்டில் சுரேஷ் மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணியளவில் ரமணி வீடு திரும்பினார். அங்கு சுரேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சுரேஷின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com