புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில், 

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது, மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். நலவாரிய பலன் உடனடியாக வழங்க வேண்டும். நலவாரிய மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன் சோபனராஜ், நிர்வாகிகள் பெஸ்லிபெல், ஜான் பேபி, சுரேந்திரன், ஜான் சவுந்தர்ராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com