ஆட்டோ திருட்டு

பாபநாசம் அருகே ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆட்டோ திருட்டு
Published on

பாபநாசம், ஜூன்.25-

பாபநாசம் அருகே ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ திருட்டு

பாபநாசம் அருகே பண்டாரவாடை சூபி நகரில் வசித்து வருபவர் முகமதுஅலி(வயது34). இவர் தனக்கு சொந்தமான ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த முகமதுஅலி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் மெயின் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் அதிராம்பட்டினம் ஏரிக்கரை காலனியைச் சேர்ந்த ரகுமான் (38) என்றும் இவர் பண்டாரவாடையில் இருந்து முகமது அலிக்கு சொந்தமான ஆட்டோவை திருடி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரகுமானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com