சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி மாத திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

கன்னியாகுமரி,

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை குரு பாலஜனாதிபதி ஏற்றி வைத்தார்.

முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com