அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணாவு

வேப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணாவு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணாவு
Published on

வேப்பூர், 

வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையபெருமாள், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு நடைமுறைகள், குற்றவாளிகள் அறைகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் போலீசார், மாணவ-மாணவிகளிடம் விளக்கி கூறினர். தொடர்ந்து, காவல்துறை குறித்து நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வேப்பூர் மற்றும் பூலாம்பாடி அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com