விழிப்புணர்வு உறுதிமொழி

சாத்தூரில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
விழிப்புணர்வு உறுதிமொழி
Published on

சாத்தூர்,

சாத்தூர் நகராட்சி பொது சுகாதார அலுவலகத்தில் மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர் நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி மற்றும் சுரேஷ் முன்னிலை வகித்தனர். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com