அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : உமாபதியின் மேல்முறையீடு மனு - அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரிய குற்றவாளி உமாபதியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த ஐகோர்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : உமாபதியின் மேல்முறையீடு மனு - அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பாபு என்பவர் விசாரணை காலத்தில் சிறையிலேயே இறந்துவிட்டதால், மற்ற 16 பேருக்கு எதிரான வழக்கில் கடந்த 3-ந் தேதி தீர்ப்பு கூறிய சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களில் குணசேகரன் என்பவரை மட்டும் விடுதலை செய்தது.

மீதமுள்ள 15 பேரில், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உமாபதி, தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரிய குற்றவாளி உமாபதியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த ஐகோர்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com