ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

வடுவூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
Published on

வடுவூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

பெண்ணுக்கு பிரசவ வலி

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள நெய்வாசல் சின்னபொன்னாப்பூரை சேர்ந்த அன்பழகன் மனைவி ராஜாத்தி (வயது30). இவருக்கு இன்று (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வடுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் இருந்து மருத்துவ உதவியாளர் முரளி, டிரைவர் பாரதிராஜா ஆகியோர் சென்று ராஜாத்தியை ஆம்புலன்சில் அழைத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர்.

பெண் குழந்தை

ஆனால் சிறிது தூரத்திலேயே ராஜாத்திக்கு பிரசவ வலி அதிகமானது. அவர் வலியால் துடிதுடித்தார். இதையடுத்து ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி அவருக்கு மருத்துவ உதவியாளர் முரளி பிரசவம் பார்த்தார். இதில் ராஜாத்திக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து தாய் மற்றும் குழந்தையை தஞ்சை அரசு ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் முரளியை கிராம மக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com