உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடந்தது.
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
Published on

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம்திருச்சி உறையூரில் உள்ள காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை மகர லக்னத்தில் பாலாலய பூஜை நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, விமானம் கலாகர்ஷணம் முதல்கால யாகபூஜை, பூர்வாங்க பூஜைகளும், அதனை தொடர்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 9 மணியளவில் கோவில் விமானங்களுக்கு சித்திர படத்தில் பாலாலய பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com