

தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நீர்வரத்து இன்று சீரானதால், 2 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் நேற்று குற்றால அருவிகளில் சுற்றுலாவாசிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சிறிது நேரத்திற்குள் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான அருவி, மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.