குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க 7 நாட்களுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறைகள், மரக்கிளைகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டன. இதனால் மெயின் அருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள், தடுப்பு கம்பிகள் ஆகியவை சேதமடைந்தன.

இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு ஆண் யானையின் சடலம் அருவிக்கரையில் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் சற்று தணிந்தது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் குற்றால அருவியில் முகாமிட்டு, சேதங்களை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று வரை தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. அதே சமயம், ஐந்தருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க 7 நாட்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருவியில் கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்திய நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com