தேயிலை தோட்டத்தில் கரடிகள் நடமாட்டம்

தேயிலை தோட்டத்தில் கரடிகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் கரடிகள் நடமாட்டம்
Published on

கோத்தகிரி

கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக காட்டு யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பகல் மற்றும் இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா பகுதியில் தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி முகாமிட்டுள்ளது. இந்த கரடிகள் தேயிலை தோட்டத்தில் உலா வருவதால், பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் தொழிலாளர்கள் இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அங்கு திடீரென கரடிகள் வந்ததால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் கரடிகள் தாக்கி விடுமோ என்கிற அச்சத்தில் அவர்கள் பணிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். எனவே, கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com