ரெயிலில் கஞ்சா கடத்திய பீகார் மாநில வாலிபர் கைது

ஜோலார்பேட்டையில் ரெயிலில் கஞ்சா கடத்திய பீகார் மாநில வாலிபர் கைது
ரெயிலில் கஞ்சா கடத்திய பீகார் மாநில வாலிபர் கைது
Published on

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்து நின்று செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என்று ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு சோதனை மேற்கொண்டனர்.

அதிகாலை 1-வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் சோதனை செய்தனர்.

அப்போது பொருட்கள் வைக்கும் இடத்தில் இருந்த பையை சோதனை செய்யும் போது ஒரு பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அ

தில் அவர் பீகார் மாநிலம், நர்ஹர்பூர் பகுதியை சேர்ந்த அமீத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com