சொரக்குடி அய்யனார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

சொரக்குடி அய்யனார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
சொரக்குடி அய்யனார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
Published on

நன்னிலம் அருகே உள்ள சொரக்குடியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்குள்ள உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை 5 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணும் பணி நடைபெறும். அதன்படி நேற்று மதியம் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் தமிழ்மணி, கணக்கர் சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ. 2 லட்சத்து 12 ஆயிரத்து 468-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com