நாட்டுப்படகு எரிப்பு

நாட்டுப்படகு எரிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டுப்படகு எரிப்பு
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் சங்குமால் கடல் பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அந்த படகின் ஒரு பகுதி எரிந்த நிலையில் பலத்த சேதம் அடைந்து கிடந்தது. தகவல் அறிந்ததும் கடலோர போலீசார் விரைந்து வந்து அந்த படகை மீட்டு பார்வையிட்டனர். மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதில் எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com