கன்னியாகுமரியில் நீர்மட்டம் தாழ்வு:2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் நீர்மட்டம் தாழ்வால் 2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமானது.
கன்னியாகுமரியில் நீர்மட்டம் தாழ்வு:2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
Published on

நாகர்கோவில்:

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் கடல்நீர் மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. நேற்று காலையில் 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. பின்னர் 10 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகில் ஏறி சன்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com