விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தாமதம்

கடல் நீர்மட்டம் 2-வது நாளாக தாழ்வு விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தாமதம்
விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தாமதம்
Published on

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக தொடங்கவில்லை. காலை 11 மணியளவில் கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர்.

மேலும் வட்டக்கோட்டைக்கு செல்லும் படகும் இயக்கப்படவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக படகு சேவை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com