நூல் வெளியீட்டு விழா

ராணிப்பேட்டையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் காந்தி பங்கேற்றார்.
நூல் வெளியீட்டு விழா
Published on

ராணிபேட்டையில் எழுத்தாளர் புங்கனூர் ஆனந்த் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அப்துல்காதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இலக்கியம், சமூக சிந்தனை, கற்பனை கவிதைகள் மற்றும் உண்மை கதைகளை பின்புலமாக கொண்டு எழுத்தாளர் ஆனந்த் எழுதிய நூல்களை, அமைச்சர், பொதுமக்கள் மற்றும் பல நாடுகளிலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் பேராயர் ஷர்மா நித்தியானந்தம், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com