பொங்கல் பண்டிகை ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது

நெல்லையில் பொங்கல் பண்டிகை ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது.
பொங்கல் பண்டிகை ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது
Published on

பண்டிகை கால நாட்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும். அந்தவகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் முன்பதிவு நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பொதுமக்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஜனவரி 12-ந் தேதி தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு தொடங்கியது. இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் முன்பதிவு செய்ய வந்தனர். அனைத்து ரெயில்களிலும் உடனடியாக முன்பதிவு முடிந்து விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com