சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

பந்தலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
Published on

பந்தலூர், 

பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் ரதீஸ் (வயது 20). இவர் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். இதில் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரதீசை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com