குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

வாணியவல்லம் கிராமத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகுகிறது.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
Published on

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் யூனியன், வாணியவல்லம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் குழாய் உடைந்து தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது தடையாக இருப்பதுடன் தண்ணீர் ஆங்காங்கே விவசாய நிலங்களில் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்ல. இது குறித்து மாவட்ட நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com