

தேனி,
தேனி மாவட்டம் வைகை அணை அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் சீறி பாய்ந்த காட்சியை ஏராளமானோர் சாலையோரம் கண்டு ரசித்தனர்.
இதே போல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலல் இருந்து 61 ஜோடி மாடுகள் சீறிப் பாய்ந்தன. இதனை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.