பேருந்து கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம்: புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரிக்கு விடுமுறை

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #strike
பேருந்து கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம்: புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரிக்கு விடுமுறை
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாட்டில் பஸ் கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 6 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று இன்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயாகவும் இருந்தது. இப்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழக அரசு பேருந்து கட்டணத்தினை கடந்த வெள்ளி கிழமை இரவு உயர்த்தி அறிவித்தது. இந்த கட்டண உயர்வு 20ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயாகவும் இருந்தது. இப்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு அடிப்படை பயண கட்டணத்துடன் 20% கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தில் மாணவ மாணவிகள் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் மன்னர் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த கல்லூரியின் நிர்வாகம் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து உள்ளது.

#strike #holiday #Busfare

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com