"புறவழிச்சாலை பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் எ.வ.வேலு

கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
"புறவழிச்சாலை பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் எ.வ.வேலு
Published on

சென்னை,

கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, கோவை மாவட்டத்தின் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்ததும் 250 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், இரண்டாம் கட்ட பணி 70 சதவீதமும் மூன்றாவது கட்டமாக நிலம் எடுக்கும் பணி 50 சதவீதமாக நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் நிலம் எடுக்கும் பணிகளை விரைவுபடுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com