பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு

பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது.
பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான வளாக தேர்வு நடைபெற்றது.

ஜோஸ்டெக் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆபரேஷன் மேனேஜர் பாஸ்கரன், மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்தார். 35 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வான 6 மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ் உள்பட பலர் பாராட்டினர்.

ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com