இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும்: முதல்-அமைச்சருக்கு, திருநாவுக்கரசர் வேண்டுகோள்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும்: முதல்-அமைச்சருக்கு, திருநாவுக்கரசர் வேண்டுகோள்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்ற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே, தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான தடையை ரத்து செய்வதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com