கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது
கஞ்சா கடத்தியவர் கைது
Published on

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அம்பலவாணபுரம் விலக்கில் பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு அருகே சேசையாபுரத்தை சேர்ந்த குமார் மகன் கண்ணன் (வயது 25) என்பவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் 20 கிராம் சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, சுமார் ஒரு கிலோ அளவிலான கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, கண்ணனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com