தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது -ராமதாஸ் அறிக்கை

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது -ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில், சிங்கள கடற்படை அத்துமீறி நுழைந்து கைது செய்திருக்கிறது. சிங்களப்படையினரின் தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கடற்கொள்ளையர்களால் கொள்ளைகளுக்கு ஆளாக்கப்படுவதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இலங்கை அரசை கடுமையாக எச்சரிப்பதன் மூலமாகவோ, அல்லது இரு தரப்பு பேச்சுகளின் மூலமாகவோ வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com