

மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று மாலை ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில், மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார், ஆட்டோவின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ, காரில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.