மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - கல்லூரி மாணவி பலி

செங்கத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - கல்லூரி மாணவி பலி
Published on

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கமலக்கண்ணன். இவருடைய மகள்கள் ஸ்ரீநிதி(வயது19) ஆற்காடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இரண்டாவது மகள் கார்த்தியாயினி(16) பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்ரீநிதி கல்லூரிக்கு செல்ல பஸ்சில் ஏற்றி விடுவதற்காக அவரது தங்கை கார்த்தியாயினி உடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செங்கம் போளூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கார்த்தியாயினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஸ்ரீநிதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த முருகன் என்பவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com