வெள்ளகோவில் அருகே கார்-ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

வெள்ளகோவில் அருகே காரும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில் அருகே கார்-ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Published on

திரூப்பூர் மாவட்டம் , வெள்ளகோவில், எல்.கே.சி நகர் பகுதியை சேர்ந்த அரண்மனைதுரை என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 35). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் வெள்ளகோவிலில் இருந்து காரில் ஓலப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திருப்பூரில் இருந்து வெள்ளகோவிலை நோக்கி வந்த ஜீப் ராஜ்குமார் சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் ராஜ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜீப்பில் வந்த திருப்பூர், வளையங்காடு பகுதியைச் சேர்ந்த மணிவேல் (55), சேகர் (50), வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி செல்வி (40), இவரது மகள் கனிமொழி (18), ஆகியோர் காயமடைந்தனர், காயமடைந்த 4 பேரும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று,  மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இறந்துபோன ராஜ்குமாருக்கு அனு என்ற மனைவியும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com