குன்றத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கார்- மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

குன்றத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கார்- மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
குன்றத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கார்- மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
Published on

குன்றத்தூர், மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நித்யா தேவி (வயது 32). இவர், வேளச்சேரியில் உள்ள தனியார் டியூஷன் சென்டரில் வேலை செய்து வருகிறார். அதே குடியிருப்பில் 6 பேர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென அங்கு நிறுத்தி இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், தண்ணீரை ஊற்றி வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் நித்யா தேவியின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் லேசான சேதம் அடைந்தது. மர்ம நபர்கள் அந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் யாராவது வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனரா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com