கார் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரை திருடி சென்றனர்.
கார் திருட்டு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்துரை அடுத்துள்ள அழகாபுரியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் தனது டீக்கடை முன்பு அவருக்கு சொந்தமான காரை நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் காலையில் பார்க்கும் போது கார் மாயமாகி இருந்தது தெரியவந்தது. ஆனால் கார் நின்ற இடத்தில் கண்ணாடி மட்டும் உடைந்து கிடந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com