

சத்தியமங்கலம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூரில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை முகாமில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அவருடைய மனைவி தேவிபாலா (38). இவர்களுக்கு ஜனனி (1) என்ற பெண் குழந்தை இருந்தது. செல்வம் குடும்பத்துடன் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் செல்வம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளியில் வாடகைக்கு வீடு பார்த்திருந்தார். இதைத் தொடர்ந்து வீடு மாற்ற பொருட்களை எடுத்து செல்வதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான முருகேசன் (26) என்பவரை காரில் அழைத்துக்கொண்டு சென்றார்.
காரை செல்வம் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகே மனைவியும், குழந்தையும் உட்கார்ந்து இருந்தனர். முருகேசன் காரின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தார்.