இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மாமனார் உள்பட 2 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மாமனார் உள்பட 2 பேர் மீது வழக்கு
Published on

பரமத்திவேலூர்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கும், நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கேட்டரிங் முடித்து விட்டு அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இதனால் திருமணம் முடிந்ததும் கணவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார்.

இதனால் நான் மாமனார் வீட்டில் வசித்து வந்தேன். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் எனது மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். இதுகுறித்து மாமியாரிடம் கூறியபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே பாலியல் தொல்லை புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, இளம்பெண்ணின் மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com