அரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு

அரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு
Published on

அரூர் போலீசார் ஈச்சம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தை அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது 4 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் சூதாட பயன்படுத்திய பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். பாஸ்கர், தருமன், அருள், அனில் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com