விவசாயி மீது தாக்குதல்; 10 பேர் மீது வழக்கு

குருபரபள்ளி அருகே விவசாயி மீது தாக்குதல்; 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விவசாயி மீது தாக்குதல்; 10 பேர் மீது வழக்கு
Published on

குருபரப்பள்ளி:

போச்சம்பள்ளியை அடுத்த வடமலம்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு சொந்தமான நிலம், வள்ளுவர்புரத்தை அடுத்த நாகமரத்துபள்ளத்தில் உள்ளது. அந்த நிலத்தை மாதையன் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வள்ளுவர்புரத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் மாதையனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com