பெண்ணை கேலி செய்த 7 பேர் மீது வழக்கு

பெண்ணை கேலி செய்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணை கேலி செய்த 7 பேர் மீது வழக்கு
Published on

வடக்கன்குளம்:

பழுவூர் அருகே திருப்பதிசாரம் கீழூரைச் ஒரு பெண்ணை சிதம்பரபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுயம்பு (வயது 50), பொன்மேல் மகன் ஸ்டாலின் (46), செண்பகப்பெருமாள் மகன் வில்சன் (47), ராமையா மகன் செல்வகுமார் (46), திரவியம் மகன் சுப்ரமணி (36), முத்து மகன் அய்யப்பன் (44) மற்றும் பிள்ளையார் குடியிருப்பைச் சேர்ந்த பால்துரை மகன் ரங்கசாமி (48) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். அந்த பெண் பழவூர் போலீசில் புகார் செய்தார். 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com