அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு - அதிமுக நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவு

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக நிர்வாகிகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு - அதிமுக நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவு
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அதிமுக கட்சிக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com