முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு 7-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு 7-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு 7-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
Published on

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அ.தி.மு.க.வை சேர்ந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர் மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகினர். இந்த நிலையில் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com