அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு; கனிம வளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சாட்சியம்

கனிம வளத்துறை முன்னாள் துணை இயக்குனர் கந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு; கனிம வளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சாட்சியம்
Published on

விழுப்புரம்,

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்றைய தினம் கனிம வளத்துறை முன்னாள் துணை இயக்குனர் கந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை(நாளை) நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com