மணல் கடத்தியவர் மீது வழக்கு

மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மணல் கடத்தியவர் மீது வழக்கு
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் தனது உதவியாளருடன் தென்கச்சி பெருமாள் நத்தம் கொள்ளிடக்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி வழியாக மொபட்டில் 3 மூட்டைகளில் மணல் ஏற்றி வந்தவரை தடுத்து நிறுத்தினார். ஆனால் மொபட்டில் வந்தவர் மொபட்டையும், மணல் மூட்டைகளையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மணல் மூட்டைகளையும், மொபட்டையும் கைப்பற்றிய கிராம நிர்வாக அலுவலர், இது பற்றி விசாரித்தபோது மணல் கடத்தி வந்தவர் அண்ணங்காரன்பேட்டை பகுதியை சேர்ந்த குணாளன் (வயது 64) என்பது தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் போலீசில் அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com