குழந்தை இல்லை என கூறி இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர், மாமியார்

குழந்தை இல்லை என கூறி இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர், மாமியார்

கம்பம் அருகே குழந்தை இல்லை என கூறி இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகள் பவித்ரா (வயது 26). இவருக்கும், கூழையனூரை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராஜேஷ்குமார் (33) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பவித்ராவின் குடும்பத்தினர் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். அந்த நகைகளை அவருடைய கணவர் ராஜேஷ்குமார், மாமியார் போதுமணி ஆகியோர் அடகு வைத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று கூறி பவித்ராவை அவர்கள் கொடுமை செய்து, அவரை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா புகார் அளித்தார். அதன்பேரில் அவரது கணவர் ராஜேஷ்குமார், மாமியார் போதுமணி ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com